Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிலக்கரி இறங்குதளம் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்

பிப்ரவரி 07, 2019 08:46

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கடல் வழியாக கப்பலில் கொண்டு வந்து இறக்க வசதியாக திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்து விடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்ககூடாது என்றும், ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆலந்தலை பகுதி மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

தலைப்புச்செய்திகள்